தமிழ்நாடு – காஞ்சிபுரம் அருகே இலங்கை பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவம் கிராமத்தில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் அருகே வையாவூர் பாரதிநகரில் வசிப்பவர் பூமணி. இவர் நந்தம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றுகின்றார்.
இவரது மனைவி புனிதவதி (44). இவர்கள் கடந்த 30 வருடத்துக்கு முன் இலங்கையில் இருந்து அகதிகளாக வந்தவர்கள். இவர்களது மகள் அம்சத்துவானி (17). 10ம் வகுப்பு படிக்கிறாள். மகன் இறையன்பு, பொறியியல் முடித்துவிட்டு திருச்சியில் வேலை செய்கிறார்.
மற்றொரு மகன் தினேஷ்குமார் (19) பிளஸ் 2 படித்து வருகிறான். நேற்றிரவு 7 மணி அளவில் புனிதவதி, அந்த பகுதியில் உள்ள தனது அக்கா சுசீலா வீட்டுக்கு சென்றார்.
இதன்பிறகு நள்ளிரவு ஆகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து மனைவியை தேடி சுசீலா வீட்டுக்கு பூமணி சென்றார். அங்கிருந்து புனிதவதி கிளம்பிவிட்டது தெரிந்தது.
இதையடுத்து புனிதவதியை பல இடங்களில் தேடி அலைந்தனர். ஆனால் அவரை பற்றி தகவல் இல்லை.
இந்நிலையில், தனது வீட்டின் பின்புறம் உள்ள ஏரிக்கரை புதரில் பலத்த காயத்துடன் புனிதவதி இறந்துக் கிடந்தது பார்த்து குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலை பார்த்து பூமணி கதறி துடித்தார்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் காஞ்சிபுரம் தாலுகா பொலிஸ் பொறுப்பதிகாரி மாதவன் சம்பவ இடத்துக்கு விரைந்தார்.
புனிதவதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார். உருட்டுக்கட்டையால் அடித்து புனிதவதி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார், புனிதவதியை கொன்றது யார், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்று விசாரிக்கின்றனர்.
மேலும் கொலை தொடர்பாக அவரது கணவர் பூமணி மற்றும் நெருங்கிய உறவினர்களிடம் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வையாவூரில் பீதியை ஏற்படுத்தி கிளப்பியுள்ளது.
Slider
Blog links
Featured Posts Coolbthemes
இலங்கைச் செய்திகள்
இந்தியச் செய்திகள்
உலகச் செய்திகள்
சினிமா செய்திகள்
விந்தை உலகம்
தீவகச் செய்திகள்
Tamil Karaokes's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Popular Posts
-
காமம் ஒரு மனிதனை எந்த அளவு ஆட்டிப் படைக்கின்றது என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது அச்சுவேலி முக் கொலைச் சம்பவம். சினிமாப் படங்கள், தொலைக்காட்...
-
பருத்தித்துறை தும்பளை நெல்லண்டை பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த வெளிமடை மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புமற்றும் 03.05.2014 ல் நடைபெற்ற பருத்தித்துறை தும்பளை நெல்லண்டை பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த வெளிமடை மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பு
-
யாழ்.மாநகர சபையில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வந்துள்ள 87 பணியாளர்களுக்கு இன்றைய தினம் (28) நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டன. முன்னுரிமை...
-
மூக்குத்தி குத்திக் கொள்வதால் பெண்களுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆண்களின் மூச்சுக்காற்றை விட பெண்...
-
தேர்தல் விதிகளை மீறியதாக குஜராத்தில் அந்த மாநில முதல்வரும் பாஜக பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடி மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள...
-
ஒரு ஆண் எத்தனை பெண்களையும் திருமணம் செய்ய அனுமதி- கென்யாவில் புதிய சட்டம்! ஒரு ஆண் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ள அனுமத...
-
சூர்யா ‘அஞ்சான்’ படம் முடிந்ததும் வெங்கட்பிரபு இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் ப...
-
வடமாகாண முதலமைச்சரே ஜனாதிபதி பொது வேட்பாளர் நிலைக்கு தகுதியானவர். அவரை பொது வேட்பாளராக தெரிவு செய்வதன் மூலம் எதிர்க கட்சிகளின் பொது வேட்பாளர...
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புதுக்குடியிருப்பு மற்றும் கிராண்குளம் ஆகிய பிரதேசங்களிலுள்ள குடும்பங்...
-
கனடாவில் ஆபாச நடிகையாக இருந்து பாலிவுட்டின் முன்னணி நடிகையாக மாறிய நடிகை சன்னிலியோன் குறித்த சர்ச்சைக்குரிய செய்தி ஒன்று டுவிட்டரில் வெளியான...
