Slider

Blog links

Featured Posts Coolbthemes

இலங்கைச் செய்திகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

சினிமா செய்திகள்

விந்தை உலகம்

தீவகச் செய்திகள்

» » » புதுக்குடியிருப்பு மற்றும் கிராண்குளம் பகுதி வாழ் குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புதுக்குடியிருப்பு மற்றும் கிராண்குளம் ஆகிய பிரதேசங்களிலுள்ள குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் அண்மையில் வழங்கப்பட்டன.


மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் கிரான்குளம் சீ மூன் காடன் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வின் போதே காணி உறுதிகள் வழங்கப்பட்டன.


இந்த வைபவத்தில் மீள் குடியேற்ற பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் எஸ்.வாசுதேவன் பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொன். ரவீந்திரன் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சர் டாக்டர் எஸ். சுகுணன் மற்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் வடக்கு கிழக்கு மாகாண பணிப்பாளர் என். விமல்ராஜ் உட்பட அதிகாரிகள் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

«
Next
Newer Post
»
Previous
Older Post