Slider

Blog links

Featured Posts Coolbthemes

இலங்கைச் செய்திகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

சினிமா செய்திகள்

விந்தை உலகம்

தீவகச் செய்திகள்

» » » சம்­பந்தன், விக்கி­னேஸ்­வ­ரனின் தமிழ் இன­வா­தத்­தை ஒழிக்க வேண்­டும். சம்­பிக்க ரண­வக்க.

பொது­ப­ல­சேனா, ராவணா சக்தி அமைப்­புக்­களின் பௌத்த குரு­மாரை கைது செய்ய வேண்­டு­மென போர்க்­கொடி உயர்த்­துவோர் ஏன் இலங்­கைக்கு எதி­ராக செயற்­படும் மன்னார் ஆயர் இரா­யப்பு ஜோசப்பை கைது செய்­யு­மாறு வலி­யு­றுத்­து­வ­தில்­லை­யென கேள்­வி­யெ­ழுப்பும் ஜாதிக ஹெல உறு­ம­யவின் பொதுச் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான சம்­பிக்க ரண­வக்க பயங்­க­ர­வா­தத்தை ஒழித்­தது போன்று சம்­பந்தன், விக்கி­னேஸ்­வ­ரனின் தமிழ் இன­வா­தத்­தையும் ஒழிக்க வேண்­டு­மென்றும் கோரிக்கை விடுத்தார்.


பத்­த­ர­முல்­லையில் நேற்று திங்­கட்­கி­ழமை நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்றும் போதே அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க இவ்­வாறு தெரி­வித்தார்.



அமைச்சர் இங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில், யுத்­தத்தில் எமது படை­யினர் விஷ ஆயு­தங்­களை பயன்­ப­டுத்தி 1,49,000 தமிழ் மக்­களை கொன்­றார்கள் என்று பொய்­யான குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்தி ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்­கு­ழு­விற்கும் சர்­வ­தேச நாடு­க­ளுக்கும் மன்னார் ஆயர் இரா­யப்பு ஜோசப் கடி­தங்­களை அனுப்­பினார்.


டேவிட் கமரூன் யாழ்ப்­பாணம் சென்­ற­போது பாதி­ரி­மா­ரையும், மக்­க­ளையும் ஒன்­று­தி­ரட்டி இலங்­கைக்கு எதி­ராக கருத்­துக்­களை வெளி­யிடச் செய்­த­வரும் இவரே ஆவார்.


இவ்­வாறு நாட்டின் சட்­டங்­க­ளையும் அர­சி­ய­ல­மைப்­பையும் மீறி துரோகம் செய்யும் மன்னார் ஆயர் இரா­யப்பு ஜோசப்பை கைது செய்ய வேண்­டு­மென எவரும் குரல் கொடுப்­ப­தில்லை.


அதற்­காக ஆர்ப்­பாட்டம் நடத்­தப்­ப­டு­வ­து­மில்லை. இரா­யப்பு ஜோசப்­புக்கு எதி­ராக சட்டம் இயங்­கு­வ­தில்லை. ஆனால் பௌத்த குருமார் ஆர்ப்­பாட்டம் நடத்­தினால் கூட்டம் நடத்­தினால் கைது செய்­யப்­ப­டு­கின்­றார்கள். நீதி­மன்­றத்தால் பிடி­யாணை பிறப்­பிக்­கப்­ப­டு­கின்­றது.


பொது­பல சேனா, ராவணா பலய பௌத்த குரு­மா­ருக்கு எதி­ராக சட்­டத்தை அமுல்­ப­டுத்­து­மாறும் கைது செய்­யு­மாறும் வலி­யு­றுத்­துவோர் இரா­யப்பு ஜோசப்பின் நாட்டை காட்டிக் கொடுக்கும் செயற்­பா­டு­க­ளுக்கு மத்­தியில் மௌனம் காக்­கின்­றார்கள்.


கொழும்பில் 2,56,000 தமிழ் மக்கள் வாழ முடி­யு­மானால் ஏன் வடக்கில் சிங்­கள மக்கள் வாழ முடி­யாது? வட மாகாண முத­ல­மைச்­சரும் கொழும்பில் தான் வாழ்­கிறார். ஆனால் சிங்­கள மக்கள் வடக்கில் குடி­யேற்­றப்­படும் போது வடக்கில் சிங்­கள மய­மாக்கல் நடப்­ப­தாக கூறு­கின்றார்.



சம்­பந்­தனும் இத­னைத்தான் கூறு­கின்றார்.

எனவே பயங்­க­ரவாம் ஒழிக்­கப்­பட்ட நாட்டில் தமிழ் இனவாதமும் ஒழிக்கப்பட வேண்டும்.


இராயப்பு ஜோசப்பின் நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக கத்தோலிக்க திருச் சபையும், கர்தினால் மெல்கம் ரஞ்சித்தும் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

«
Next
Newer Post
»
Previous
Older Post