Slider

Blog links

Featured Posts Coolbthemes

இலங்கைச் செய்திகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

சினிமா செய்திகள்

விந்தை உலகம்

தீவகச் செய்திகள்

» » » 25 கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்கள் கொள்ளை

கடுகண்ணாவ பிரதேசததிலுள்ள பிரசித்தி பெற்ற ஹோட்டலொன்றில் நேற்று இடம்பெற்ற மாணிக்கக் கற்கள் ஏல விற்பனையின் போது 25 கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

நேற்று மதியம் 12.20 மணியளவில் ஏல விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கையில் மாணிக்கக் கற்களை கொள்வனவு செய்ய வந்திருந்த இருவர் பெறுமதியான ஒன்பது மாணிக்கக் கற்களை கொள்ளையடித்துக் கொண்டு ஜீப் வண்டியிலேறி தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து மாணிக்கக் கல் கொள்வனவாளர்களை அழைத்து வந்திருந்த முகவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொள்ளையடிக்கப்பட்ட ஒன்பது மாணிக்கக் கற்களின் பெறுமதி 25 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் அந்த கற்களின் உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

கொள்ளையிடப்பட்ட மாணிக்கக் கற்களுடன் தப்பியோடிய இருவரும் தமக்குத் தெரிந்தவர்கள் என கைது செய்யப்பட்டுள்ள முகவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

கொள்ளையர்கள் இருவரும் மாணிக்கக் கற்கள் ஏல விற்பனை நடவடிக்கைகளின் போது துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தியே துணிகரமான இத்திருட்டை மேற்கொண்டுள்ளனர்.

இவர்களைக் கைது செய்வதற்கான சகல நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொண்டுள்ளதுடன், மாவனல்லை பொலிசாரின் தலைமையில் இதற்கென எட்டு விசேட குழுக்களும் நியமிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டுள்ளன.

«
Next
Newer Post
»
Previous
Older Post