வாகனம் ஒன்றுக்கு வழி விடுவதற்காக வீதியில் விலகிய மோட்டார் சைக்கிள் மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதிக் கொண்டதில் ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் படு காயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று மதியம் 1.30 மணியளவில் நல்லூர் சட்டநாதர் கோவிலுக்கு அண்மையாக இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்துக் குறித்து கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நல்லூரில் மோ.சைக்கிள்கள் மோதி விபத்து : மூவர் படுகாயம்
Tag: Sri lanka news Srilanka