எட்டு வயது நிரம்பிய சிறுமியான பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சந்தேக நபர் ஒருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்ய முயன்ற நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்புக்கடவள பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட மாணவியாவார்.
பாதிக்கப்பட்ட சிறுமி தமது வீட்டுத் தேவைக்காக முட்டை வாங்குவதற்காக வேண்டி சந்தேக நபருடைய கடைக்குச் சென்றுள்ளார். இதன் போது முட்டை தருவதாகத் தெரிவித்து சிறுமியை கடையின் பின்புறமாக அழைத்துச் சென்றுள்ள சந்தேக நபர் அங்கிருந்த அறை ஒன்றுக்குள் வைத்து சிறுமியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து வீட்டுக்குச் சென்றுள்ள சிறுமி நடந்த சம்பவத்தை தனது தாயிடம் தெரிவித்ததையடுத்து தாய் சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
சிறுமியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் தனக்கு எதிராக முந்தல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருப்பதை அறிந்து கொண்ட சந்தேக நபர் தற் கொலை செய்து கொள்ளும் நோக்கில் நஞ்சருந்தியுள்ளதாக பொலிஸார் தெரிவி த்தனர். இவ்வாறு நஞ்சருந்திய அவர் முந்தல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து மேலதிக சிகி ச்சைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Slider
Blog links
Featured Posts Coolbthemes
இலங்கைச் செய்திகள்
இந்தியச் செய்திகள்
உலகச் செய்திகள்
சினிமா செய்திகள்
விந்தை உலகம்
தீவகச் செய்திகள்
Home
»
Sri lanka news
»
Srilanka
» முட்டையைக் காட்டி சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சந்தேக நபர் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சி.
Tamil Karaokes's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Popular Posts
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புதுக்குடியிருப்பு மற்றும் கிராண்குளம் ஆகிய பிரதேசங்களிலுள்ள குடும்பங்...
-
ஆறு மாதங்களில் முடியாததை ஆளுநர் 6 நாட்களில் செய்து விட்டார் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணல் என்ற வகையில் ஆறு மாதங...
-
யாழ்.மாநகர சபையில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வந்துள்ள 87 பணியாளர்களுக்கு இன்றைய தினம் (28) நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டன. முன்னுரிமை...
-
தேர்தல் விதிகளை மீறியதாக குஜராத்தில் அந்த மாநில முதல்வரும் பாஜக பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடி மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள...
-
வடக்கில் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல் பலாத்கார சம்பவங்களுடன் தொடர்புடைய 17 இராணுவச் சிப்பாய்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்...
-
கடந்த 2 தினங்களுக்கு முன்னர் திருகோணமலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயல்குழு கூட்டம் நடைபெற்றது யாவரும் அறிந்ததே. இதில் கலந்துகொண்ட ...
-
ஒரு ஆண் எத்தனை பெண்களையும் திருமணம் செய்ய அனுமதி- கென்யாவில் புதிய சட்டம்! ஒரு ஆண் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ள அனுமத...
-
மத விவகார பிரச்சினைகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட காவற்துறை குழு, சிறுபான்மை மதங்களை அடக்குவதற்காக முன்னெடுக்கப்பட்ட மற்று...
-
அப்பன் என்ற புலி உறுப்பினர், அநுராதபுரத்தில் தங்கியிருந்த போது மேற்படி தபால் ஊழியர் அவருக்கு உதவியதாக பொலிஸார் கூறினர். புலிகள் இயக்கத்துக்க...
-
சூர்யா ‘அஞ்சான்’ படம் முடிந்ததும் வெங்கட்பிரபு இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் ப...
